எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இது நாங்கள் மறக்க வேண்டிய நாளில் ஒன்று. நாங்கள் எங்கள் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதுகுறித்து சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது என்று நான் நினைக்கிறேன்.
அதனை களத்தில் செயல்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. பந்து வீச்சாளர்களைக் கூட குறை சொல்ல முடியாது, ஏனெனில் இது மிகக்குறைந்த ஸ்கோர். குறிப்பாக இந்த விக்கெட்டில் எங்கள் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியிருந்தது. நாங்கள் இங்கு விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சில தடுமாற்றங்களைச் சந்தித்துள்ளோம். இருப்பினும் தோல்விக்கு இதுபோன்ற காரணங்களை நாங்கள் கூற முடியாது.
ஏனென்றால் நாங்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்ய வேண்டும், அதற்கு ஏற்ப செயல்படவேண்டும். நாங்கள் இந்த போட்டியில் தோற்றுவிட்டோம், ஆனால் தொடரில் அல்ல” என்று கூறிவுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி அஹ்மதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அல்லது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now