1-mdl.jpg)
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்டோபர் 16) முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது.
அதேசமயம் பிரிஸ்பேனில் மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் 16 அணிகளும் கேப்டன்களும் ஐசிசியின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முன்னமே தேர்வு செய்யப்பட்ட தகவலை வீரர்களிடம் சொல்லி விடுவேன். ஏனெனில் அப்போதுதான் அவர்களால் நன்றாக பயிற்சி எடுக்க முடியும். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முக்கியமானதுதான்.