
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் தொடர்ச்சியான 9 வெற்றிகளை பற்றி நாக் அவுட் சுற்றில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர் வெற்றிகளுடன் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது.
அதே வேகத்தில் லீக் சுற்றில் 199 ரன்களுக்கு சுருட்டி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போல் இறுதிப்போட்டியிலும் வென்று 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா விளையாட உள்ளது. குறிப்பாக 2003 மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.
மறுபுறம் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சந்தித்த இந்தியாவை மீண்டும் ஃபைனலில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக நட்சத்திர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.