Advertisement

இன்றைய போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவுள்ளது - கேஎல் ராகுல்!

அணியில் சிலர் சிலவிதமாக இருப்பார்கள். எல்லோராலும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. இன்றைய போட்டியில் நாங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை என கேஎல் ராகுல் ராகுல் தெரிவித்துள்ளார். .

Bharathi Kannan
By Bharathi Kannan April 16, 2023 • 12:53 PM
We were 10 runs short, says Lucknow Super Giants captain KL Rahul
We were 10 runs short, says Lucknow Super Giants captain KL Rahul (Image Source: Google)
Advertisement

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்தார். அடுத்த அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். ஷிகர் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இல்லாததால், ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.

இதையடுத்து 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனதால், உள்ளே வந்த மேத்தியூ ஷாட் 34 ரன்கள் அடித்து அவுட்டானார். சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்று ஆட்டமிழந்தார். ராசா அவுட்டானாலும், களத்தில் நின்ற ஷாருக் கான், அணிக்காக கடைசிவரை நின்று 10 பந்துகளில் 2 சிக்சர்ஸ் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து போட்டியை பினிஷிங் செய்தார். இது வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியது. இறுதியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Trending


போட்டி முடிந்தபின் பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், “நாங்கள் ஒரு பத்து ரன்கள் குறைவாக அடித்திருந்தோம். மேலும் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் அது பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக உதவி இருக்கிறது. அத்துடன் பந்துவீச்சிலும் எங்களது தரத்திற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படவில்லை.

இன்றைய போட்டியில் புதிய பிட்ச்சில் விளையாடினோம். ஆகையால் கடந்த போட்டிகளில் அடிக்கப்பட்ட ரன்கள் விக்கெட்டுகள் எதுவும் இதற்குப் பொருந்தாது. இருப்பினும் நாங்கள் சிறப்பான துவக்கம் கொடுத்ததால் அப்படியே எடுத்துச் சென்று 180-190 எண்கள் அடித்து விடலாம். இதை வைத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் மேயர்ஸ், பூரான் மற்றும் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிக் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய போட்டியில் துரதிஷ்டவசமாக அவர்கள் எளிதாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறி விட்டார்கள். சில அபாரமான கேட்சுகள் பவுண்டரி லைனில் பிடிக்கப்பட்டது. இது முற்றிலும் எதிர்பாராதது. எங்களுக்கு லக் இல்லை.

அணியில் சில வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள். சில வீரர்கள் நிதானமாக விளையாடுவார்கள். அனைவராலும் அதிரடியாக விளையாட முடியாது. அவர்களுக்கு எது சிறப்பாக வருமோ அதில் பிடிமானமாக இருந்து கொண்டு அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தால் போதும். எவரை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் பார்த்துக் கொள்வோம். இன்றைய போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது, சரி செய்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement