Advertisement

நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

நாங்கள் லெந்த் பந்துகளுக்கு பதிலாக அதிக பவுன்சர் பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2025 • 10:05 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2025 • 10:05 AM

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேஎல் ராகுல் 35 ரன்னிலும், டூ பிளெசிஸ் 23 ரன்னிலும், செதிகுல்லா அடல் 22 ரன்னிலும், கருண் நாயர் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி 3 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “அது ஒரு அருமையான ஸ்கோர் என்று நினைக்கிறேன். மேலும் இந்த மைதானத்தில் சில வித்தியாசமான மற்றும் மாறக்கூடிய பவுன்ஸ் இருந்தது. அது பேட்டிங் செய்ய மிகவும் சிறப்பாக இருந்தது. எங்கள் லென்த்களில் நாங்கள் போதுமான அளவு பந்துவீசவில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் லெந்த் பந்துகளுக்கு பதிலாக அதிக பவுன்சர் பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன். 

Also Read: LIVE Cricket Score

ஐபிஎல் தொடர் மற்ற பிரீமியர் லீக்கை விட பெரியது. நீங்கள் நேர்மறையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அடுத்த நாள் நீங்கள் ஒரு புதிய மனநிலையுடன் வருவீர்கள். நீங்கள் நிகழ்காலத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். நாங்கள் மீண்டும் அணி வீரர்களுடன் ஆலோசனையில் ஈடபடவேண்டும். அடுத்த போட்டியில் நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் வருவோம். அதேசமயம் நானும் அடுத்த போட்டிக்குள் காயத்திலிருந்து மீள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement