இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - நிக்கோல் பால்தும்!
எங்களிடம் இருந்த பந்து வீச்சாளர்களாலும், களத்தில் இருந்த அனுபவத்தாலும், நாங்கள் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது என ஆஸ்திரேலிய ஏ அணி கேப்டன் நிக்கோல் பால்தும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரு அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது முடிவடைந்துள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மேடலின் பென்னா 39 ரன்களையும், அலிஸா ஹீலி 27 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணியில் ஷஃபாலி வர்மா 41 ரன்களையும், மின்னு மணி 30 ரன்களையும், ராகவி பிஸ்ட் 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் இந்திய ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சியன்னா ஜிஞ்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இப்போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய ஏ அணி கேப்டன் நிக்கோல் பல்தும், “நாங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததாக உணர்ந்தோம், இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் அவுட்ஃபீல்ட் மிகவும் வேகமானது, எனவே சில நேரங்களில் இங்கு பந்தை தடுப்பது கடினம். ஆனால் எங்களிடம் இருந்த பந்து வீச்சாளர்களாலும், களத்தில் இருந்த அனுபவத்தாலும், நாங்கள் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
Also Read: LIVE Cricket Score
மேலும் எங்களிடம் நான்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களைப் பயன்படித்தி முடிந்தவரை சீக்கிரமாக ஆட்டத்தை முடிக்க விரும்பினோம். அதற்கேற்றார் போல் இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now