அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டப்ளினில் நடைபெறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேசி கார்டி 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 102 ரன்களையும், மேத்யூ ஃபோர்ட் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 58 ரன்களையும், கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்களையும் ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களைக் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் லியாம் மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், பேரி மெக்கர்த்தி, ஜோஷுவா லிட்டில் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் அயர்லாந்து அணி இலக்கை நோக்கி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரண்மாக போட்டி தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.