
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை சாம்பியன், கிரிக்கெட் களத்தில் வீழ்த்தவே முடியாத அணி என பல பெருமைகளை பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது மிகவும் மோசமாக நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுமோசமாக தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வேகபந்து வீச்சாளருமான இயன் பிஷப் வீரர்களின் உடல் தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள இயன் பிஷப், “ரஹீம் கார்ன்வால் போன்ற வீரர் அணியில் இருப்பதெல்லாம் உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் எவ்வாறு கையாளுகிறது என்பதை காட்டுகிறது. ரஹீம் கார்ன்வால் களத்தில் கூட முழுமையாக அவரால் நிற்க முடியவில்லை. இந்தியா போன்ற தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்களை தேர்வு செய்யுங்கள். மேலும் டோமினிகா வில் அமைக்கப்பட்ட ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் இருந்தது.