
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் செட்டாகிவிட்டது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி என பலமாக உள்ளனர். ஆனால் மிடில் ஓவரில் முக்கிய பொறுப்பை சுமக்கவிருப்பது சூர்யகுமார் யாதவ் தான். ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்.
ஆஸ்திரேலிய களங்களில் பந்துகளுக்கு இயற்கையாகவே அதிக வேகமும், அதிக பவுன்ஸர்களும் கிடைக்கும். ஸ்லோவான பிட்ச்-களில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், மிக வேகமாக வரும் களங்களை எப்படி சமாளிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.