-mdl.jpg)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சைநடத்துகின்றன.
அதன்படி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.
மேலும் கேப்டன் ரோகித் சர்மா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், “அவருக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள சிறிய தொந்தரவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார் . முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற தோல்விக்கு பிறகு தற்போது தான் மும்பை அணி தனது வெற்றியை தூங்கி இருக்கிறது இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா வயிற்று வலி காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது இன்றைய போட்டியில் பின்னடைவாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .