Advertisement

பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!

பந்துவீச்சாளர்களின் தரம் அவர்கள் கொண்டுவரும் திறமை இதனால் என்னுடைய வேலை என்பது இந்திய அணியில் எளிமையான ஒன்றாக மாறுகிறது என இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 30, 2023 • 15:53 PM
பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!
பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஐந்து முறை இரண்டாவது பேட் செய்து ஐந்து ஆட்டங்களையும் வென்று இருந்தது. எனவே நேற்று முதலில் பேட்டிங் செய்யும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.

முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளத்திற்கு சரியான இலக்கு என்னவென்று தீர்மானித்து அதற்கேற்றபடி விளையாடி இலக்கை உருவாக்க வேண்டும். இதற்கடுத்து தருகின்ற இலக்குக்கு தகுந்தவாறு அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இப்படியான புது சவால்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது அணிக்கு உண்டு.

Trending


நேற்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்திற்கு சரியான ரன்களில் 30 ரன்கள் குறைவாகத்தான் எடுத்தார்கள். அதே சமயத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி இருவரும் உலகத் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு வெற்றியை மிக எளிதாகக் கொண்டு வந்தார்கள்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, “அணியில் உங்களுக்கு ஷமி போன்ற திறமையாளர்கள் இருக்கும்பொழுது, அவர்கள் அணிக்காக என்ன கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து விவாதிக்க வேண்டிய பெரிய அவசியமே கிடையாது. இவர்கள் எல்லோருமே போதுமான அளவு கிரிக்கெட் விளையாடி அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்காக நாங்கள் குழு விவாதம் செய்து திட்டமிட்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பந்துவீச்சாளர்களின் தரம் அவர்கள் கொண்டுவரும் திறமை இதனால் என்னுடைய வேலை என்பது இந்திய அணியில் எளிமையான ஒன்றாக மாறுகிறது. இது நிர்வாகத்தை பற்றியது. அவர்கள் போதுமான கிரிக்கெட் விளையாடி, மைதானத்திற்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து இருக்கிறார்கள். நான் பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது. என்ன மாதிரியான திட்டம் என்பது குறித்துதான் பேசுவோம். ஆனால் திட்டத்தை மைதானத்தில் சரியாகச் செயல்படுத்தக்கூடிய அவர்களுக்குத்தான் முழுப் பெருமையும் சேர வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement