Advertisement

WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 13, 2023 • 21:46 PM
ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம் விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ்
ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம் விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ் (Image Source: Google)
Advertisement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் போன ஏமாற்றத்துடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர். 

Trending


இதனால் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரர் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் , ரோகித் சர்மா 30 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்டனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது அரைசதத்தைக் கடந்தார்.

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 62 ரன்களையும், ரோஹித் சர்மா 68 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இதையடுத்து இந்திய அணி 4 ரன்கள் பின் தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement