
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் பின்னடைவை சந்திந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து இணைந்த இஷான் கிஷன் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.