Advertisement

இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்!

ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் சரியான ஸ்கோரை எட்டமுடியவில்லை என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Advertisement
இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்!
இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 12, 2025 • 08:56 PM

ஐபிஎல் தொடரில் இன்ற் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 12, 2025 • 08:56 PM

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Trending

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஷுப்மன் கில், “இந்த விக்கெட்டில் ஆரம்பத்திலிருந்தே ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதனால் ஏதெனும் ஒரு பேட்டர் 17-18 ஓவர்கள் விளையாடினால் 200-220 ரன்களைச் சேர்க்க முடியும் என்று பேசி இருந்தோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் சரியான ஸ்கோரை எட்டமுடியவில்லை. 

மேலும் அந்த கட்டத்தில் விக்கெட்டும் அவ்வளவு எளிதாக இல்லை என்பதால், எங்களால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. அதனால் இனி வரும் போட்டிகளில் அதனை மேம்படுத்த வேண்டியது அவசியம். பந்துவீச்சை பொறுத்தமட்டில் நங்கள் எப்போதும் விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறோம், அதுதான் எங்களுடைய நோக்கமாகவும் இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் போதிய ரன்களைச் சேர்க்கவில்லை. அதனால் 2-3 விக்கெட்டுகளை எடுத்தால் நாங்கள் ஆட்டத்தில் நுழைய முடியும். 

மேலும் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தோம். இருப்பினும் அதனை தொடக்கத்தில் அதனை செய்ய தவறிவிட்டோம். மேற்கொண்டு நாங்கள் பந்து வீசும்போது 10-11வது ஓவருக்குப் பிறகு சிறிது பனி இருந்தது. பந்து நாங்கள் நினைத்த அளவுக்கு நிற்கவில்லை. இருப்பினும் ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்றதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் 60 ரன்களையும், சாய் சுதர்ஷன் 56 ரன்களையும் சேர்த்த நிலையில் அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 58 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஷ் பதோனி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement