
Will Don The Wicketkeeper's Role Whenever The Requirement Arises: KL Rahul (Image Source: Google)
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி விக்கெட்டை வீழ்த்த கிடைத்த கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டதாக தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கினர். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தபோதும், கீப்பங்கில் செய்த தவறால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கேஎல் ராகுல் கூறுகையில், “கடந்த 6 முதல் 7 மாதங்களாக இந்திய அணி பெரியளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. 2020ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ளேன். அதேபோல் மிடில் ஆர்டரிலும் தொடர்ந்து விளையாடி வந்துள்ளேன். ரிஷப் பந்த் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது எனக்கு தெரியாது.