
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் மிகவும் வெற்றிகரமான டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு முன்னோடியான தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வரும் டி20 பிளாஸ்ட் தொடர்தான். ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்தின் டி20 ப்ளாஸ்ட் தொடர் 2003 முதல் 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொள்கின்றன. இதிலிருந்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியில் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தற்பொழுது நடந்து வரும் இந்த டி20 ப்ளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் விளையாடுகிறார்.
இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 3.2 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் காயம் ஏற்பட்ட காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவருக்குப் பதிலாக நியூசிலாந்து ஆல் ரவுண்டர் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டார்.