
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பந்தை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பந்த் இந்தாண்டு ஐபில் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ரிஷப் பந்த இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரிஷப் பந்த் தற்சமயம் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளர். அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் வரும் விஷயங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.