
winner Virat Kohli praises R Ashwin's presence of mind in win over Pakistan (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிசெய்தது.
அதிலும் கடைசி பந்தில் அஸ்வின் யாரும் எதிர்பாராத விதமாக வையிட் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை பாராட்டியுள்ளார்.
போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு பேசிய விராட் கோலி, “ஆட்டத்தில் வெற்றி பெற 15 அல்லது 16 ரன்கள் ஒரு ஓவருக்கு தேவைப்படும் என்ற சூழலில் ஒரு பந்துக்கு 2 ரன்கள் அடித்துவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்து கொள்வார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த உடன் பரபரப்பு தொற்றி கொண்டது.