
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு! (Image Source: Google)
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.