
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணியில் பூச்சத்தம் - சுத்திருவாங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுத்திருவாங் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பூச்சத்தமும் 29 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய நானாபனட் கொஞ்சரோகேவும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து களமிறங்கிய நத்தகன் சந்தம் ஒருமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நத்தகன் சந்தம் அரைசதம் கடந்ததுடன் 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் தாய்லாந்து மகளிர் அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அஃபி ஃபிளெட்சர் 4 விக்கெட்டுகளையும், அலியா அலீன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர்.