Advertisement
Advertisement
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 19, 2024 • 08:41 PM

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 19, 2024 • 08:41 PM

இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார். 

Trending

அதைத்தொடர்ந்து இணைந்த டுபா ஹசன் - ஃபாத்திமா சனா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டுபா ஹசன் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாதிமா சனா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் யாரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், பூஜா வஸ்திரேகர் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement