Advertisement
Advertisement
Advertisement

விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

Advertisement
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2024 • 08:24 PM

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, நேற்றைய தினம் தனது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2024 • 08:24 PM

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதா தார் 28 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Trending

அதன் பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருது மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களையும் சேர்க்க, இந்திய மகளிர் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆட்டநாயகி விருதை வென்ற அருந்ததி ரெட்டி, ஐசிசி விதிமுறைகளை மீறியதாக அபராதத்தைப் பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை நிதா தாரின் விக்கெட்டை கைப்பற்றிய அருந்ததி ரெட்டி அதனை ஆக்ரோஷ்மான முறையில் கொண்டாடினார். இது ஐசிசி விதிமுறை படி தவறு என்பதால் அவருக்கு ஒரு கரும்புள்ளியை அபராதமாக விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் அருந்ததி ரெட்டி பெறும் முதல் கரும்புள்ளி இது என்பதால், அவருக்கு மேற்கொண்டு எந்தவித அபாராதமும் விதிக்கப்படவில்லை. அதேசமயம் அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்றும் ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் நான்கு டிமெரிட் புள்ளிகளை பெறும் வீராங்கனை ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement