
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அதன்படி செயிண்ட ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரெலிய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதன்பின் 24 ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார்.