Advertisement
Advertisement
Advertisement

முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!

இத்தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார்.

Advertisement
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 14, 2024 • 12:35 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 14, 2024 • 12:35 PM

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 20 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

Trending

பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடர் இணைந்த தீப்தி சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்துடன், இறுதிவரை ஆட்டமிழக்கால் 59 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் இந்திய அணியால் 142 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.  இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் அரையிறுதி கனவானது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத், “இத்தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம். இந்திய அணி எங்களிடம் மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் அணி வீராங்கனைகள் நன்றாக விளையாடினார்கள், அவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இன்று முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இந்த போட்டி எங்களுக்கு சற்று கடினமாக இருந்தது, சில சமயங்களில் நாங்கள் சறுக்கலையும் சந்தித்தோம். அதனால் நாங்கள் மைதானத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களிடம் ஆழம் அதிகம் என்பதும், முழு சுதந்திரத்துடன் விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பேட்டிங் வரிசையை சில முறை மாற்றிவிட்டோம். கடைசியில் அது இறுக்கமானபோது, எல்லிஸ் பெர்ரியின் அனுபவத்தை பயன்படுத்த விரும்பினேன். அது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement