Advertisement

வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!

விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 09, 2023 • 13:28 PM
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்தப் போட்டி ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்த காரணத்தினால் ஆட்டத்தில் சுவாரசியம் ஏகத்துக்கும் இருந்தது.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் மிகப் பொறுமையாக விளையாடியது போல தெரிந்தாலும் கூட ஆடுகளத்திற்கு தகுந்தவாறு விளையாடிய அடித்தளத்தை மிக அருமையாக அமைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக அதை தகர்த்து விட்டார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் துவக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்கள். 

Trending


ஸ்கோர் போர்டில் இரண்டு ரன்கள் இருக்கும்பொழுது இந்தியாவின் 3 விக்கெட்டுகள் பெவிலியன் போய்விட்டது. அடித்தது 199 ரன்கள் என்றாலும் அவர்கள் ஆட்டத்திற்குள் திரும்ப வந்த வேகம் அபாரமாக இருந்தது. போட்டியை பார்த்த யாரும் அந்த நிலையில் இந்திய அணி வெல்லும் என்று உறுதியாக நம்பி இருக்க முடியாது. உலகக் கோப்பை என்றாலே ஆஸ்திரேலியா அசுரத்தனமாக கிளம்பும் என்பதற்கு சாட்சியாக நேற்றும் அப்படியே இருந்தது.

இதுகுறித்து பேசிய ஆஸி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட், “நேற்று இரவு பார்த்த எங்களுடைய வேகபந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம். இன்னும் நாங்கள் எட்டு மைதானங்களில் விளையாட உள்ள எட்டு போட்டிகளில் அந்த நிலைமைகளில் நாங்கள் திரும்ப வருவோம். எனவே இது பேட்டிங் குழுவின் திட்டம் பற்றியதாக மட்டுமே இருக்கும். மேலும் நாம் பார்த்த 300 ரன்கள் என்பதற்கு மேல் 260 ரன்கள் என்பது எப்பொழுதும் சிறப்பான ஒன்றாகவே இருக்கும்.

மேக்ஸ்வெல் குறிப்பாக இந்தியாவில் அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று கூறலாம். நாங்கள் சுழற் பந்துவீச்சில் குறைவாக இருப்பதாக நினைக்கவில்லை. ஆடுகளத்தில் ஆரம்பத்தில் பந்து நன்றாக திரும்பியது என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் பனிப்பொழிவு வந்தது. ஆனால் நாங்கள் பந்துவீச்சை ஆரம்பிக்கும் பொழுது பனி இல்லாத பொழுது மிகச் சிறப்பாக இருந்தது.

இதற்குப் பின்னால் பனி கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்து விட்டது. இதனால் பந்து மென்மையாக மாறிவிட்டது. ஆனால் நாங்கள் ஒரு முத்திரையை பதிக்க போதுமான வாய்ப்பை ஆரம்பத்தில் உருவாக்கியதாக நினைக்கிறேன். விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement