
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. தற்போது பெங்களூருவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலிய அணி, 9ஆம் தேதி நாக்பூரில் முதல் டெஸ்டில் பங்கேற்கிறது.
இதுவரை இந்தியா கடைசியாக விளையாடிய 10 ஆண்டுகளில் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இந்திய அணி தனது சொந்த மண்ணில் கோட்டை விட்டது கிடையாது.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் அவர்களுடைய ரெகார்ட் அவர்கள் சொந்த மண்ணில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. நிச்சயம் இது எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். இம்முறை தங்களிடமும் நிறைய சுழற் பந்துவீச்சு படை உள்ளது.