
WPL 2023 Auction: Smriti Mandhana sold to RCB at 3.40cr! (Image Source: Google)
மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான முதல் படியாக இன்று வீராங்கனைகள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று உலகளவில் மிகவும் பிரபலமான தொடராக எழுச்சி கண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகம் கோடிகள் குவியும் இடமாகவும் இது உள்ளது.
ஐபிஎல்-ஐ பார்த்த மற்ற நாடுகளும் உள்நாட்டு தொடர்களை தொடங்கிவிட்டன. எனவே அடுத்தகட்டமாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் நடத்த கடந்த ஓராண்டிற்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்துவந்த சூழலில் இந்தாண்டு தொடங்கவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன.