Advertisement

WPL 2025: தொடரில் இருந்து விலகிய அத்தபத்து; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது யுபி வாரியர்ஸ்!

நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து சமாரி அத்தபத்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜார்ஜியா வோல் யுபி வாரியர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அத்தபத்து; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது யுபி வாரியர்ஸ்!
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அத்தபத்து; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது யுபி வாரியர்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 27, 2025 • 02:42 PM

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 27, 2025 • 02:42 PM

அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான யுபி வாரியர்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

Trending

அதன்படி யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ரூ.30 லட்சத்திற்கு ஜார்ஜியா வோல்வை யுபி வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் இரண்டு சீசன்களிலும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அலிசா ஹீலி காயம் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் சினெல்லே ஹென்றி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேற்கொண்டு அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையும் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றொரு வீராங்கனையும் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்சமயம் அணிக்குள் வந்துள்ள ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

யுபி வாரியர்ஸ் அணி: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், விருந்தா தினேஷ், பூனம் கெம்மர், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா, ஜார்ஜியோ வோல், உமா சேத்ரி, அலனா கிங், ஆருஷி கோயல், கிராந்தி கவுர், சினெல்லா ஹென்றி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement