Advertisement

சஹாவை போலவே நானும் பாதிக்கப்பட்டேன் - சயித் கிர்மாணி!

தன்னுடைய நாட்களில் உச்சத்தில் விளையாடியபோது காரணமே இல்லாமல் கழற்றி தன்னை விடப்பட்டது போல தற்போது அனுபவ விக்கெட் கீப்பராக உச்சத்தில் விளையாடி வரும் ரித்திமான் சாஹாவை இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டு உள்ளதாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மாணி குற்றம் சாட்டியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 24, 2022 • 11:27 AM
Wriddhiman Saha is currently India’s most technically sound wicketkeeper, opines Syed Kirmani
Wriddhiman Saha is currently India’s most technically sound wicketkeeper, opines Syed Kirmani (Image Source: Google)
Advertisement

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இதில் பெங்களூரில் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கு இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Trending


இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வரும் அனுபவ வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வந்த மூத்த வீரர்கள் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சஹா தேர்வு செய்யப்படாதது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் கடந்த சில வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் அதிரடியாக விளையாடி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தனக்கென முத்திரை பதித்துள்ள ரிஷப் பந்த் நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். 

ஆனால் அவருக்கு முன்பிலிருந்தே விளையாடி வரும் சஹா அவரைப் போல பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடினார். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் அவரின் பங்கு மிகமிகக் குறைவாக மாறியதை அடுத்து இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உருவாகியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய நாட்களில் உச்சத்தில் விளையாடியபோது காரணமே இல்லாமல் கழற்றி தன்னை விடப்பட்டது போல தற்போது அனுபவ விக்கெட் கீப்பராக உச்சத்தில் விளையாடி வரும் ரித்திமான் சாஹாவை இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டு உள்ளதாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மாணி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுபற்றி பேசிய அவர்“சஹாவை சுற்றி பல தரமான வீரர்கள் ஐபிஎல் உட்பட பல்வேறு வகையான போட்டிகளில் தொடர்ந்து போட்டி அளித்து வருகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் அவர் சோகமாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அனைவரின் வாழ்விலும் உயர்வு தாழ்வு இருக்குமல்லவா. இந்திய தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் அவரை போன்ற வீரர்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. நான் விளையாடிய காலத்தில் எனக்கும் இதே போன்றதொரு அநீதி இழைக்கப்பட்டது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை.

நான் எனது கிரிக்கெட் கேரியரில் உச்சத்தில் இருந்தபோது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து என் மீது தவறு இல்லாதபோதிலும் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டேன். இந்தியாவுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நான் பலமுறை காப்பாற்றியுள்ளேன். ஆனால் இறுதியில் ஒரு சில பத்திரிகைகளில் நான் மோசமாக செயல்பட்டதால் நீக்கப்பட்டேன் என தவறான செய்திகளைப் படித்தேன்” என கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement