Advertisement

இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!

காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 25, 2023 • 19:14 PM
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு! (Image Source: Google)
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

பொதுவாக வேகத்துக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க மைதானங்களில் வெற்றி காண்பதற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தரமாக இருப்பது அவசியமாகும். அது போன்ற சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Trending


இதனால் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் 3ஆவது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில் காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பிரசித் கிருஷ்ணாவை பற்றி எனக்கு உறுதியாக தெரியாது. காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவரால் ஒரே நாளில் தேவைப்பட்டால் 15 – 20 ஓவர்களை வீச முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது. என்னுடைய இந்த கருத்தை அவர் தவறு என்று நிரூபித்தால் நன்றாக இருக்கும். 

அவர் மட்டுமல்ல நான் சொல்லும் கருத்தை பொய் என்று யார் நிரூபித்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் எனது கருத்தை தவறு என்று அவர்கள் நிரூபித்தால் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தமாகும். கடந்த ஒன்றரை வருடங்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நன்றாக செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தான் என்னுடைய ஓப்பனிங் பவுலர்கள். 

அதைத் தொடர்ந்து பிட்ச்சை பார்த்த பின் முகேஷ் குமார் என்னுடைய 3வது பவுலராக இருப்பார். ஏனெனில் அவர் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி பந்தை நகற்றும் திறமை கொண்டுள்ளார். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் பெரிய ஸ்பெல்களை வீசிய அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். ஒருவேளை நாள் முழுவதும் 18 – 20 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் கூட அவர் அதை செய்வார்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement