
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஜெய்ஷ்வால் முதல் பந்தில் இருந்தே தாக்குதல் ஆட்டமாடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதிரடிக்கு பெயர்போன ஜோஸ் பட்லர் ஒரு முனையில் அமைதியாக விளையாட இளம் வீரர் ஜெய்ஷ்வால் அவருக்கும் சேர்த்து அதிரடியாக விளையாடினார். அவருடைய ஷாட்கள் அதிரடியாக இருந்தது மட்டுமல்லாமல் கிளீனாகவும் இருந்தது.
தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து, 43 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. பவர் பிளேவில் ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடிய ஆட்டமே சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியே தற்பொழுது பேசியிருக்கிறார்.