
இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.
மேலும் இப்போட்டியில் சதடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீலி 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 91 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தவிர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிம் கார்த் 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது.