
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து வதந்திகளால் கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இருவரும் இன்னும் தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் இந்த ஊகங்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் தனஸ்ரீ வர்மா இந்த விஷயம் குறித்து மௌனம் களைத்த அவர், உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் விவாகரத்து வதந்தி குறித்து தற்சாமயம் யுஸ்வேந்திர சஹாலும் தனது சமூக வலைதள பதிவின் மூலம் மௌம் களைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அனால் யுவேந்திர சாஹல் தனது அறிக்கையில் தனஸ்ரீ வர்மாவைப் பற்றியோ அல்லது இருவருக்கும் இடையேயான உறவைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சில சமூக ஊடகப் பதிவுகள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மையாகாமல் இருக்கலாம் என்ற ஊகங்களை வெளியிட்டு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது பதிவின் மூலம் விளக்கியுள்ளார்.