
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இத்தொடரில் நிறைய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 2 மூத்த ஸ்பின்னர்கள் தேர்வாகியுள்ளதால் இளம் வீரர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.