Advertisement

மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி!

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா அயர்லாந்து வீரர்களை பேட்டைக்கொண்டு தாக்க முன்றதாக இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2023 • 19:27 PM
மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி!
மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி! (Image Source: Google)
Advertisement

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தற்போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராஸா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர் ஜாஸ் லிட்டில் மற்றும் கோர்டீஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது இருவரும் எல்லையற்ற முறையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

Trending


ஒரு கட்டத்திற்கு மேல் சிக்கந்தர் ரஸா தன்னுடைய பொறுமையை இழந்து பேட்டால் அயர்லாந்து வீரர்களை அடிக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த நடுவர் சிக்கந்தர் ரஸாவை தடுத்து அழைத்துச் சென்றார். சிக்கந்தர் ரஸாவின் இந்த செயலால் கடுப்பான மற்றொரு அயர்லாந்து வீரர் சிக்கந்தர் ரஸா வை அடிக்க சென்றார். அப்போது மற்றொரு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஐசிசி நன்னடத்தை விதிகளுக்கு மீறியது என்பதால் சிக்கந்தர் ரஸாவுக்கு 50 சதவீதம் போட்டியிலிருந்து ஊதியத்தை அபராதமாக விதித்த நடுவர்கள் அவரை இரண்டு டி20 போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர். இதே போன்று அயர்லாந்து வீரர்கள் கேம்பர் மற்றும் ஜாஸ் லிட்டில் ஆகியோருக்கு போட்டியிலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்திருக்கிறது.

தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள சிக்கந்தர் ரஸா ஐசிசி விதித்துள்ள இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “தான் ரன் அடிக்க ஓடும்போது ஜாஸ் லிட்டில் அதனை தடுத்து என்னை அவுட் ஆக்க முயன்றதாக” கூறினார். சிக்கந்தர் ராசாவுக்கு தடை, ஆனால் அயர்லாந்து வீரர்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டும்தான் அபராதமா என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement