
Zimbabwe cricketer could face punishment over his help-seeking tweet (Image Source: Google)
கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் என்றால் அது ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பார்ல் வெளியிட்ட பதிவு தான்.
ரியான் பர்ல் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் வைரலானது.
இதையடுத்து புமா நிறுவனமானது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கான உபகரண ஸ்பான்சர்ஷிப்பை ஏற்றுள்ளது. மேலும் அந்த அணியின் ஜெர்சிக்கு ஏற்றவாரே ஷூக்களை தயார் செய்து அனுப்பியது.