
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்? (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
இதில் பங்கேற்று விளையாடும் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டத்தை வெல்லும் நோக்கில் இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் ஆசிய அணிகளுக்கு சாதகம் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் கிரிக்கெட் வல்லுநர்கள் பார்க்கும் அணியாக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் பலம்