Advertisement
Advertisement
Advertisement

டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 19, 2022 • 11:01 AM
Kidambi Srikanth, Treesa Jolly-Gayatri Gopichand Enter Second Round Of Denmark Open
Kidambi Srikanth, Treesa Jolly-Gayatri Gopichand Enter Second Round Of Denmark Open (Image Source: Google)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நேற்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை அங்கஸ் 21-17 என்ற கணக்கில் கைப்பற்ற, அதன்பின் சூதாரித்து விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 21 -14 என்ற கணக்கில் கைப்பற்றி அச்த்தினார். 

அதன்பின் போட்டியின் வெற்றியாளாரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட கிடாம்பி 21 - 12 என்ற புள்ளிகணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார். 

மொத்தம் 56 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் அங்கஸை வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்ப் ஸ்ரீகாந்த முன்னேறி உள்ளார். 

அதே போல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீசா மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் போஜே/மகெலுண்ட் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement