
Legendary Athlete P.T Usha Elected As Indian Olympic Association President (Image Source: Google)
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 27ஆம் தேதி தான் கடைசி நாள்.
அந்தவகையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பிடி உஷா போட்டியிடுகிறார். கேரளாவை சேர்ந்த 58 வயதான பிடி உஷா, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தடகள வீரர்கள், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாக பிடி உஷா தெரிவித்துள்ளார்.