As india
5th Test Day 1: ஸாக் கிரௌலி அரைசதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் அஸ்வின், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தங்களது 100ஆவது போட்டியில் விளையாடுகின்றனர்.