Bcci secretary jay shah
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக முதலில் இரண்டு போட்டிகளிலிருந்து மட்டும் விலகினார். ஆனால் அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து வரவுள்ள ஐபிஎல் மற்ரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி பங்கேற்பார என்ற கேள்விகள் எழுந்தன.