Advertisement
Advertisement
Advertisement

Chennai super

சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
Image Source: Google
Advertisement

சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!

By Bharathi Kannan August 16, 2024 • 23:32 PM View: 85

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இம்முறை கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கான கோரிக்கைகளையும் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ யுடன் முன்வைத்துள்ளன. 

அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் தேர்வு மற்றும் ரிடெய்ன் விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களை செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவரும் படி பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியானது. 

Advertisement

Related Cricket News on Chennai super