Advertisement
Advertisement
Advertisement

ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி!

சர்சதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி!
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2024 • 01:40 PM

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அறியபடுபவர் சுனில் சேத்ரி. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மோகன் பாகன் அணிக்காக களமிறங்கி தனது திறமையால் 2005ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்து தற்போதுவரை விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணிக்காக அதில கோல்களை அடித்துள்ள வீரர் எனும் சாதனையையும் சுனில் சேத்ரி படைத்துள்ளார்.  அதேசமயம் சர்வதேச கால்பந்து விளையாட்டில் அதிக கோல்களை அடித்த 4ஆவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2024 • 01:40 PM

இந்நிலையில் தற்சமயம் 39 வயதை எட்டியுள்ள சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் தானது சர்வதேச கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பாக தனது சமூக வலைதள பக்கங்களில் காணொளி வாயிலாக இன்று அறிவித்துள்ளார். 

Trending

இதுகுறித்து பேசியுள்ள சுனில் சேத்ரி, “நாட்டுக்காக நான் முதல் முறையாக களம் கண்ட அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அப்போது எனக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த முதல் நாள் எனது பயணத்தில் சிறப்பான நாள். அறிமுக போட்டியில் கோல் பதிவு செய்திருந்தேன். இந்த 19 ஆண்டுகளில் நான் இத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளேன்.

 

ஆனால், அதில் நான் பல சாதனைகளையும் பதிவுசெய்துள்ளேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை.  இந்நிலையில் நான் எனது கடைசி போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளேன். எனது ஓய்வு முடிவை வீட்டில் அப்பா, அம்மா மற்றும் மனைவி வசம் தான் முதலில் தெரிவித்தேன். இதுதான் எனது கடைசிப் போட்டி என எனது உள்ளுணர்வு சொல்லியது. நீண்ட யோசனைக்கு பிறகு அதை முடிவு செய்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து சுனில் சேத்ரிக்கு இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு, பிசிசிஐ உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விரட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில், ‘சகோதரா உங்களை நினைத்து பெருமையடைகிறேன்’ என்று பதிவுசெய்துள்ளார். விராட் கோலியின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement