Ipl 2022
ஐபிஎல் 2022: புதிய அணிகள் குறித்து பிசிசிஐ தகவல்!
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் 8 அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்த சீசன் முதல் ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.