Advertisement
Advertisement

Jwala singh

ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
Image Source: Google

ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!

By Bharathi Kannan August 03, 2023 • 14:46 PM View: 285

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடத்தை பிடித்துவிட்ட இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஐபிஎல் சீசனில், சிறப்பாக செயல்பட, அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.  இந்திய அணிக்கும் தேர்வாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஆனால் இவர் குறித்த ஒரு செய்தி அவர் மிளிரத்தொடங்கிய நாள் முதலே வந்து கொண்டிருக்கிறது.

அவர் தந்தை ஒரு பானி பூரி வியாபாரி என்றும், இவர் அந்த கடையில் வேலை செய்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி இருந்தது. ஆனால் தற்போது அவரது சிறு வயது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் அதனை மறுத்துள்ளார்.  சமீபத்திய பேட்டியில், ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் தெருக்களில் பானி-பூரி விற்றதாக வைரலான செய்தியை பார்த்து மனமுடைந்ததாக கூறியுள்ளார்.

Related Cricket News on Jwala singh