Mum vs mah
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுகளோடே வெளியேறியது.
இதில் மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி டிரா செய்தது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்தன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை அணியால் தகுதி பெற முடியாமல் போனது.