New zealand cricket team
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 18) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள், போட்டி நடைபெற உள்ள மைதானத்துக்கு அருகில் இருக்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறி வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அந்த அணியின் டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட், அணியின் பிசியோ டாமி சிம்செக் உள்ளிட்ட ஆறு நபர்கள் விடுதிக்கு அருகிலுள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சென்று விளையாடியதாக கூறப்படுகிறது.