Nitish rana
பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன் - நிதீஷ் ராணா!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39ஆஆவது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தாணி சார்பாக துவக்க வீரர் ரஹமனுல்லா குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார். பிறகு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.