Prem kumar
டிஎன்பிஎல் 2025: தொடர்ச்சியாக 5 வெற்றிகள்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கில்லீஸ்
சேலம்: ஆஷிக் மற்றும் ஜெகதீசன் அகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன்ஸ் அணி ஹாரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஹரி நிஷாந்த் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ராஜகோபால், கவின், விவேக் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர்.
Related Cricket News on Prem kumar
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47