Rcb vs csk
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சிஎஸ்கே!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனேவில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸும் விராட் கோலியும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். அதிரடியாக ஆடி டுப்ளெசிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சற்று மந்தமாக ஆடிய கோலி 33 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்னில் ரன் அவுட்டானார்.